Sunday, October 11, 2009

பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்

பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - திருக்குறள் (322)

இக்குறள் குறித்து மின்தமிழ் குழுமத்தில் அலசப்படுகிறது. சுட்டியைப்
பார்க்கவும்.
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/d719a8cfe875af3c/fd09d3b0a544fb9c#fd09d3b0a544fb9c


இக்குறளில் “நூலோர்” என்பது யாரைக் குறிக்கிறது என்பது தான்
இங்கே விவாதப் பொருள்.

எந்த குறளின் கருத்தையும் அறியும் முன் அக்குறள் எந்த அதிகாரத்தில்
கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இக்குறள்
கொல்லாமை என்னும் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதைக்
கருத்தில் கொள்க. இது நிற்க.

"பரஸ்பரப்கிரகோ ஜீவானாம்" - என்பது ஆச்சாரியார் உமாசுவாமி அருளிய
"தத்வார்த்த சூத்திரம்”. இப்பாட்டின் பொருள்: பகிர்ந்து உண்டு, எல்லா
உயிர்களையும் காத்தலே உயிரின் நோக்கம். இதன் எதிரொலியே குறளின்
“பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்” என்பது.

இன்னுமொரு எ.கா:

”பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம்


நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை


மகாவீரர் காலத்திற்கு பிறகு, ஜைன ஆகமங்கள் தொகுக்கப்பட்டன.
இருசாரார்க்கும் (இல்லறத்தார், துறவறத்தார்), பொதுவாக “கொல்லாமையே”
தலையாய அறமாகக் கொள்ளப்பட்டது. “ஒன்றாக நல்லது கொல்லாமை”
என்ற குறள் இங்கு கருதத்தக்கது.

இக்குறளுக்கு பரிமேலழகர், “அறநூலை உடையார் துறந்தார்க்குத்
தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்” என்று உரை
செய்திருக்கிறார். இது பொருந்தாதாம்! இங்கு துறவறத்தார்க்கு சொல்லப்பட்டதாக
பொருள் படும்படி, வலிந்து பொருள் கூறுகிறார். இஃது சமணக் கொள்கையை
மறைக்கவெனில் வேறில்லை!

இரா.பானுகுமார்,
சென்னை